குளவி கொட்டு!! மருத்துவமனையில் 14 பேர்!!


ஹப்புத்தளை - தொட்டலாகலை பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


இதனையடுத்து காயமடைந்த 12 தொழிலாளர்களும் ஹப்புத்தளை வைத்தியசாலையிலும், 2 பேர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments