யாழில் மூன்று கிராமசேவையாளர் பிரிவுகள் முடக்கம்!


யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை  தொடர்ந்து, 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

இதற்கமைய, வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/26  கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட J/432 மற்றும்  J/433 ஆகிய இரு  கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன என, மாவட்டச் செயலாளர் கூறினார்.

ஏற்கனவே மாவட்ட செயலர் தன்னை சுயதினமைப்படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments