கொழும்பு முழுவதும் ஊசி மயம்!

இலங்கையின் தலைநகர் கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களிற்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி முழுமையாக வழங்கப்படவுள்ளது.

20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் இன்று (06) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

கொழும்பு-01 முதல் கொழும்பு-15 வரையிலும் வசிக்கும் மேலே குறிப்பிட்ட வயதுக்கு இடைப்பட்ட சகலரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.

2001 ஆம் ஆண்டு பிறந்தவராக இருத்தல் அவசியம். காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் ஆகையால், எவ்விதமான அச்சமும் இன்றி, தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் எவ்விதமான அச்சமும் இன்றி, அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.


No comments