சின்ன கதிர்காமர்: சுரேன் இராகவனாம்?

 

லக்ஸ்மன் கதிர்காமர் அடையாளத்தை பெறுவதில் சுமந்திரன் பின்தங்கியுள்ள நிலையில் சுரேன் இராகவன் அதில் முன்னால் வருகை தந்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லகஸ்மன் கதிர்காமருடைய 16ஆவது ஆண்டு நினைவு தினத்தை சிங்கள தேசம் மறந்தாலும் ஓடோடி சென்று நினைவுகூர்ந்துள்ளார் சுரேன் இராகவன்.

இதேவேளை சாந்தி மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பௌத்த புண்ணிய பூஜையிலும் சுரேன் ராகவன் கலந்து கொண்டார்.



இன வேறுபாடுகளின்றி தாய்நாட்டுக்காக சேவை புரிவதில் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் லகஸஷ்மன் கதிர்காமர் எனவும் சுரேன் ராகவன் புகழ்மாலை சூட்டியுள்ளார்.

குhலை சுரேன் ராகவன் கொழும்பு 03 இல் அமைந்துள்ள அமரர் லகஸ்மன் கதிர்காமர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


No comments