கம்மன் பிலவுக்கும் கண்டம் ?



இலங்கையில் பொதுஜனபெரமுனவின் பஙகாளிகளது காற்று பிடுங்கப்பட்டுவருகின்ற நிலையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஐக்கிய மக்கள் சக்தியினரால் கொண்டுவரப்பட்டுள்ளது. எரிபொருள்களின் விலையேற்றதை அடுத்தே வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விமல் வீரவன்ச கிடப்பில் போடப்பட்டுள்ள  நிலையில் தற்போது கம்மன்பில பக்கம் காற்று திரும்பியுள்ளது.

No comments