இலங்கையில் கொரோனா 4வது அலை!! எச்சரிக்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!!


இலங்கை நான்காவது கொரோனா அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments