மடுவிற்கு வெளியிலிருந்து வர தடை!



மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில், இம்முறை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்கள் மாத்திரம் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இம்முறை அனுமதி இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 15ஆம் திகதியன்று நடைபெறவுள்ள மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாகவும் அதன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம், மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், , மாவட்டச் செயலாளர்  தலைமையில் நடைபெற்றது.

மேலும், அதிகமான திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, சுகாதார செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அடுத்த கூட்டங்களில் தீர்மானங்களை முன்வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

No comments