75% நாடுகளில் டெல்டா வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 


இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  75% நாடுகளில் பரவி இருப்பதாகவும், இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும்  உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது

கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இருந்தாலும் தடுப்பூசி, தொற்றின் தாக்குதலை கட்டுப்படுத்துவதால், அதை செலுத்தும் பணிகளை உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும், கொரோனா வைரஸ் உருமாறிய நிலையில், வெவ்வேறு வகையில் பரவி வருகிறது. அதுபோல, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், அதிக வீரியத்துடன் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் உலகம்  முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்.

தற்போது நோய்த்தொற்றால் தாக்கப்பட்டுள்ள இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்,  75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், கொரோன  டெல்டா வகையை சோந்தவையாக உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

No comments