பறக்கிறது இலங்கையில் எல்லாமுமே!



இலங்கையில் உள்நாட்டு எரிவாயு விலை உயர்வு குறித்த முக்கியமான கலந்துரையாடல் நாளை (17) மாலை 6.30 மணிக்கு வர்த்தக அமைச்சில் நடைபெறும் என்று அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் எரிவாயு விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விலை அதிகாரிக்குமாறு   நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி  ஒரு கிலோ பால்மா பைக்கட்டினை 350 ரூபாவாலும், 400 கிராம் பால்மா பக்கட்டினை 140 ரூபாவினாலும் அதிகரிக்குமாறும் ஆலோசித்து வருகின்றனர்.

புதிய விலை அதிகரித்தால் ஒரு கிலோ பைக்கட் பால்மா 1,295 ரூபாவாகவும்,  400 கிராம் பக்கட்  ரூ .520 ஆகவும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments