அதிகரிக்கும் தொற்று! தமிழகத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!

 


தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அது போன்று, வரும் மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தவிர்க்க முடியாத காரணங்களினால் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments