கோடாலிபறிச்சானில் கடைவிரிக்கிறது தொல்லியல்!



வவுனியா வடக்கில் வெடுக்குநாறிமலையினை தொடர்ந்து நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய  இடிபாடுகள் உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இலங்கை படையினரின் உதவியுடன் தொல்பொருள் திணைக்களத்தினால் புராதன நினைவுச்சின்னம் ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களா இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

காட்டுப்பகுதியில் உள்ள தொல்பொருள் தடயங்கள் தொடர்பில் வவுனியா நெடுங்கேணி வீதியில் உள்ள 17 வது விஜயபாகு படையணி தளபதியால் வவுனியா தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவித்த தகவலுக்கு அமைய குறித்த பகுதி தொல்பொருள்திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

8 கற்தூண்கள் கொண்டு அமைக்கப்பட்ட கட்டிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும், அந்த பகதியில் பழைய கட்டிடங்களின் கல், ஓடுகள் 100 மீற்றர் வரையான சுற்றப்பகுதிகளில் காணப்படுவதாகவும் புதையல் தோண்டும் நபர்களால் முக்கிய பகுதி சிதைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

அங்கு காணப்படும் தொல்பொருள் எச்சங்கள் கி.மு.4, 8 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் காணப்படுகிறது.


No comments