நேற்றும் 29 மரணம்:இலங்கைக்கும் கண்டம்!



இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்தும் ஏறுமுகமாகவே இருந்துவருகின்றது.

அவ்வகையில் நேற்றைய தினமும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 921 ஆக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஒரே நாளில் நாட்டில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2289 பேர் நேற்று (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 138,085ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 110,108 பேர் குணமடைந்துள்ளதுடன், 27056 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


No comments