வெடிபொருளுடன் கைது!

 



கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர.

இலங்கை இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் அதிகாலை குறித்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதாகிய இருவரும் பளைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடிக்காக எடுத்து வரப்பட்ட வெடிபொருள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளைபளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனராம்.


No comments