14 நாள் : முடக்கமில்லை: முடக்கு!


இலங்கையினை 14 நாட்கள் முழுமையான முடக்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறான போலித் தகவல் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஜுன் முதலாம் திகதி முதல் 14 நாட்கள் முழு நாடும் முடக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளம் ஊடாக பரப்பப்படும் தகவல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற போலி செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் பொதுமக்கள் நம்பவேண்டாம் எனவும் அவர் கோரியுள்ள நிலையில் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்த போதுமானதல்ல என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


No comments