சைபர் தாக்குதல்கள்! ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா1

Joi Bedan

ரஷ்யாவின் சைபர் தாக்குதல்கள் மற்றும் பிற விரோத செயல்களுக்கு  பதிலளிக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

டஜன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிய "சோலார் விண்ட்ஸ்" ஹேக்கின் பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020 தேர்தலில் மாஸ்கோ தலையிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவால் கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரஷ்யா மறுத்துள்ளது.

இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன. அவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

No comments