அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!


 உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஏழரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட நிலையில், தடுப்பூசி போட்ட 5,800 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments