உலகிலேயே மிகப்பெரிய 5ஜி கோபுரங்களை அமைக்கும் பணியில் சீனா!


உலகிலேயே மிகப்பெரிய 5ஜி நெட்வொர்க்கை கட்டமைத்துவரும் சீனா, base station எனப்படும் கோபுரத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

5ஜி நெட்வொர்க்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள சீனா, அதனை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, முக்கிய நகரங்களில் கோபுரத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. கடந்த பிப்ரவரி வரை 7 லட்சத்து 92 ஆயிரம் 5ஜி டவர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 6 லட்சம் டவர்கள் அமைக்கப்படும் என்றும் சீன தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சீனாவுக்குள் உற்பத்தியாகும் மொபைல்களில் 80 சதவீதம் 5ஜி மொபைலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

No comments