கழுதையிடம் மன்னிப்பு கோரினார் சமல்!



அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார்.


நாடாளுமன்றத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.


அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.


இதன்காரணமாக இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்றிருந்தது.


2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் தான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.


மேலும் தனக்கு  விதிக்கப்பட்ட தேவையற்ற தண்டனையைத் தொடர்ந்து தன்னை நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீடு செய்திருந்தேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


இதன்போது கடுமையாக கோபமடைந்த சமல் ராஜபக்ஷ, “பொன்சேகா ஒரு கழுதை என்றும் முடிந்தால் வெளியே வரவும் எனவும் சவால் விடுத்திருந்தார்.


ராஜபக்ஷ பொன்சேகாவை கழுதை என்று அழைப்பதைக் கேட்ட பின்னர் ஒரு பரபரப்பான வார்த்தை பரிமாற்றம் நடந்தது.


இதனையடுத்து, ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து, தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.


இதன்போது, ​​அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனது நடத்தை குறித்து முறையான மன்னிப்பு கோரினார்.


தான் கூறிய விடயங்களின் விளைவாக யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புவதாக சமல் ராஜபக்ஷ கூறினார்.

No comments