இராமநாதன் கல்லூரிக்கு பூட்டு!



அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மூடப்படுகிறது

அதேவேளை 2021இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி திறக்கப்படுமென வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

மருதானர்மடம் இராமநாதன் கல்லூரியின் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று உள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி வரும் ஏப்ரல் 19ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

No comments