திருகோணமலையிலும் போராட்டம் ஆரம்பம்!


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுக்க வேண்டும் என வலியுறுத்தி,  கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை (15) திருகோணமலை சிவன் கோயில் முன்றலில் ஆரம்பித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் திருகோணமலை மாவட்ட சங்கத் தலைவி  நா. ஆஷா தலைமையில் இப் போராட்டம் நடைபெறுகின்றது. தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments