இராணுவத்தினருக்கு 1,500 ஏக்கர் காடுகள்! மட்டக்களப்பில் கிளம்பும் எதிர்ப்பு!!


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட தாந்தாமலை பகுதியில் இராணுவத்தினருக்காக 1,500 ஏக்கர் காடுகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை முன்னெடுக்கும் யோசனை முன்வைக்கப்பட்ட வேளையில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்களான  இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் இதனை தடுத்து நிறுத்துமாறு அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பட்டிப்பளை  பிரதேசத்திலுள்ள தாந்தாமலை பிரதேசத்திலுள்ள 1,500 ஏக்கர் காடுகளை இராணுவத்தினரின் தேவைக்காக சட்டவிரோதமாக கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம் ஆகியோர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், குறித்த நடவடிக்கையினை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் இருவரும் வலியுறுத்தியிருந்தனர். 

இந்நிலையில் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும்  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் ஏற்றுக்கொண்டிருந்ததுடன், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், மாவட்ட அபிவிருத்தி குழுவில் தீர்மானம் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

No comments