இரணைதீவு:உள்நோக்கம் கொண்டது?



கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்புடனிருக்க மனோகணேசன் கோரியுள்ளார்.இலங்கை அரசு உள்நோக்கம் கருதி இரணைமடுவை தெரிவுசெய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இத்தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ரவூப் ஹக்கீம், கிளிநொச்சி – இரணைதீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏற்கனவே அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியானது என நிரூபிப்பதற்கான முயற்சியாகவே இது அமைகிறது எனப்பதிவிட்டுள்ளார்.


No comments