யாழ்.மாநகரசபையில் மேலும்:திருநெல்வேலிக்கு உதவி!



முதல்வர் வி.மணிவண்ணனையடுத்து மற்றுமொரு யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வி.மணிவண்ணன் கிளிநொச்சி கொவிட் வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யாழ்.மரக்கறிச்சந்தை கொத்தணி மூலம் இவர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவ முன்வருமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். 


திருநெல்வேலி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது 127 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


அதில் 51 பேர் திருநெல்வேலி மத்தி , வடக்கு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதனை அடுத்து குறித்த கிராம சேவையாளர் பிரிவு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் முடக்கப்பட்டுள்ளது.


குறித்த பகுதிக்கு வெளியில் இருந்து உள்நுழையவும் , வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் குறித்த பகுதிக்குள் 1100 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , அதில் அநேகமானவர்கள் திருநெல்வேலி சந்தையில் தொழில் புரிபவர்களுக்கு , தினசரி கூலி தொழிலாளிகளும் உள்ளடங்குவதனால் , அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உறவுகள் முன் வர வேண்டும் என தவிசாளர் கோரியுள்ளார்.


No comments