மேலுமொரு தந்தை கனவுடன் பிரிந்தார்!



காணாமல் போன தனது மகனைத் தேடி கடந்த 10  வருடங்களாக போராடிய தந்தை தனது மகனை காணாமலே மரணமடைந்துள்ளார்.

வவுனியா விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கனகையா றஞ்சனாமூர்த்தி (வயது_63) என்ற தந்தையே மரணமடைந்துள்ளார்.

இவரது மகன் செல்வநாதன் (வயது-40) கடந்த 2007 ஆம் ஆண்டு தந்தைக்கு உணவு கொண்டு செல்லும் போது வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1495 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments