உதயன் சரவணபவனிற்கு விடுதலை!



உதயன் பத்திரிகையில் தேசிய தலைவர் பிரபாகரனின் படம் பிரசுரித்தமை தொடர்பான வழக்கிலிருந்து உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி திலீப் அமுதன் ஆகியோர் விடுவிக்கப்பட்டடுள்ளனர்.


இன்று யாழ்.நீதிமன்றில் இலங்கை காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்ட உதயன் குழுமத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், ஆசிரியர் பீட பிரதிநிதி திலீப் அமுதன் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகிய கே.வி. தவராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளாகிய திருக்குமரன், ஆனோல்ட் பிரியந்தன், கணதீபன், ரிசிகேசன், சலேசியஸ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.


No comments