புதைப்போம்:கோத்தாவும் வந்தார்!


புதைப்பதற்கு இடமளிப்போம்”  என மகிந்த அறிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இலங்கை ஜனாதிபதி சபைக்கு வருகை தந்ததாக தகவல்கள்; தெரிவிக்கின்றன.

இதனிடையே ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்,“நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே, பாராளுமன்றத்தில் நேற்று (09) தெரிவித்தார். அப்படியாயின், மரணமடையும் முஸ்லிம்களை புதைப்பதற்கு இடைமளிப்பீர்களா?” என வினவினார்.

அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச, “ புதைப்பதற்கு இடமளிப்போம்” என்றார்.அதற்கு எழுந்து நின்றிருந்த மரிக்கார் எம்.பி. “மிக்க நன்றி” எனக் கூறியமர்ந்தார்.


No comments