கல்லை காணோம்: ஈழத்து வடிவேல் சாணக்கியன்!

பொலிகண்டி எது அதன் ஒரு பகுதியான ஊரிக்காடு எதுவென தெரியாது திண்டாட தொடங்கியுள்ளார் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

அத்துடன் பொலிகண்டியில் ஊரிகாட்டில் நினைவு கல் நாட்டப்பட்டமை தெரியாது அவர் ஒப்பாரி வைக்க தொடங்கியுள்ளார்.

அத்துடன் வடிவேல் பாணியில் கிணற்றை காணோமென்பது போல நாட்டப்படவிருந்த கல்லை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று மாலை வெற்றிரமாக நிறைவடைந்துள்ளது.

கடந்த 3ம் திகதி பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கிழக்கு மாகாணம் முழுவதும் பயணித்து, பின்னர் வடக்கு மாகாணத்தில் போராட்டத்தை நிறைவு செய்துள்ளது.

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு, முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

அகிம்சை வழியில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் வெற்றியளித்துள்ளதாக வடகிழக்கு சிவில் சமூக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த போராட்டத்தை நினைவு கூரும் வகையில், பொலிகண்டியில் கல்லொன்றை நாட்டுவதற்கு திட்டமிட்ட போதிலும், குறித்த கல்லை சிலர் திருடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்தார்.

இது ஒரு சதி முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.

ஆயினும் சுமந்திரனின் ஆலோசனையில் அவர் அடிக்கல் நாட்ட திட்டமிட்டிருந்த பகுதி பொது மலசல கூடமென தெரியவருகின்றது.

இதனிடையே குறித்த நினைவு கல் 35 தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்ட பொலிகண்டி குடியேற்றத்திட்டப் பகுதியில் சிவில் சமூக தரப்பால் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments