பூநகரி,யாழ்.பல்கலை நீளும் பட்டியல்?


கொவிட் 19 தொற்று காரணமாக கிளிநொச்சி பூநகரி எரிபொருள் நிரப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனிடையே எழுதுமட்டுவாழ் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் எழுமாற்று கொரோனாப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் இலங்கை இராஜாங்க அமைச்சர்  தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இவர் சிகிச்சைக்காக ஹிக்கடுவ ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

அதேவேளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் உள்ள பிரபல உணவகம்  சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவன் ஒருவன் மரண சடங்கிற்காக பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார்.இதற்கிடையில் குறித்த மாணவனின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த மாணவனிடம் மாதிரிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 5ம் திகதி குறித்த மாணவன் உணவு அருந்துவதற்காக குறித்த உணவகத்திற்கு வந்திருக்கின்றார். 

இது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் சென்றுவந்த இடங்களை உடனடியாக சுகாதார பிரிவு முற்றுகையிட்டு முடக்கிவருகின்றது. இதனடிப்படையில் குறித்த உணவகம்  முடக்கப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் குறித்த மாணவனுடன் ஒன்றாக இருந்த நான்கு மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments