தடுப்பூசி பெற்றுக்கொண்ட 240 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது!
இஸ்ரேல் நாட்டில், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 240 பேருக்கு கொரோனா உறுதியானதாக, அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியும் 240 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், கொரோனா தொற்று
ஏற்பட ஐந்து சதவீத வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
Post a Comment