4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!


சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை அச்சுறுத்தி நகைகள், ஒரு தொகைப் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர் கொள்ளையர்கள் நால்வரை கைது செய்துள்ளனர்.

கைது செய்தவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் காவல்துறையினரின் பிடியில் இருந்து கைவிலங்கோடு சந்தேக நபர்களில் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளார்.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாவகச்சேரி டச் வீதிப் பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் நடத்தி வீடு ஒன்றுக்குள் மறைந்திருந்த சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

No comments