வந்து சேர்ந்தது கொரோனா தடுப்பு மருந்து! விரைவில் விநியோகம்!!


இங்கிலாந்து நாட்டுக்குள் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துகள் வந்து சேர்ந்துள்ளன. குறித்த தடுப்பூசிகள் இரகசியமாக ஓர் இடத்தில் களஞச்சியப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள ரகசிய இடத்தில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இங்கிலாந்து முழுக்க தடுப்பூசி மையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பைஸர்  தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது. இங்கிலாந்து  மொத்த 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுகாதார மற்றும் முதியோர் காப்பக ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. முதியோர் இல்லங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் முதியோர் இல்ல ஊழியர்கள் ஆகியவர்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.


No comments