மன்னாரிலும் ஆழிப்பேரலை அனர்த்த நினைவேந்தல்கள்!

ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை

காலை நினைவு கூறப்பட்டது. மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது சர்வமத தலைவர்கள், திணைக்காள அதிகாரிகள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டனர். சமநேரத்தில் இங்கு தேசிய பாதுகாப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.







No comments