யாழ்.மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!


யாழ்.மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேறும் போது, , வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஏனையோர் முடிந்தளவு உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்குமாறும் , அவ்வாறு தங்க வசதியற்றவர்கள் பொது கட்டடங்களில் தங்கும் போது கோவிட் -19 நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் , சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மரங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும் , மின் தடங்கல் , குடிநீர் உள்ளிட பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராகவும், திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்க தயார் நிலையில் இருக்குமாறும் , முடிந்தளவு அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அனர்த்தங்கள் தொடர்பில் 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு அறிவிக்கவும்.

No comments