மீனவ சந்திப்பா அல்லது ஆதரவாளர்கள் சந்திப்பா?


இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பில் இருநாடுகளுக்கும் இடையில் துறைசார் பேச்சுக்களை எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இம்முறையும் டக்ளஸ் தனது ஆதரவாளர்களை மட்டும் அழைத்து செல்வாராவென்ற கேள்வி மீனவ அமைப்புக்களிடையே எழுந்துள்ளது. 

எல்லை தாண்டி இலங்கைக் கடல்பரப்பிற்குள் வருகின்ற இந்திய மீனவர்கள், இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை வலையை தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் கடல் வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை காத்திரமான பலன் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கடல்தொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சராகப் பொறுப்பேற்ற் டக்ளஸ் தேவானந்தாவால் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இலங்கையின் கடல் வளங்களும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தமிழக மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்ற அடிப்படையில் புதிய பொறிமுறை ஒன்றைத் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ்வுடன் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ், இந்தத் திட்ட வரைவினை இந்தியப் பிரதமரிடம் கையளித்திருந்தார்.

இந்தத் திட்டம் தொடர்பில் இந்தியத் தரப்பினரால் திருப்தி தெரிவிக்கப்பட்டதுடன். கடந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கிடையிலான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பித்து, இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காண தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் காணொலி மூலம் பேச்சுவார்த்தையை நடத்த இலங்கை இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments