போலி தேசியமாம்:போட்டு தாக்கும் டக்ளஸ்



வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு மறைமுகமாக ஆதரவு அளித்திருக்கின்றமை போலித் தமிழ் தேசியவாதிகளின் இரட்டை வேடத்தை மீண்டுமொரு முறை அம்பலப்படுத்தி இருப்பதாக அமைச்சர் டக்ளஸ்  தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் பற்றிய மாயையை ஏற்படுத்தி, அதில் குளிர் காய்கின்ற  போலித் தமிழ் தேசியவாதிகள்,  தன்மீது இருக்கின்ற அரசியல் பயம் காரணமாகவே வரவு செலவுத் திட்டத்தில் கலந்து கொளளாமல் அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையிலான எமது அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரவு செலவுத்திட்ட விவாதங்களில்,  கடந்த இரண்டு வாரங்களாக நடாத்திய போலி தேசியம் பேசும் பத்து திருடர் கூட்டத்துடன் டொலர் கஜேந்திரன் அவர் கூட்டாளி பெ(b)ன்ஸ் ஆகியோர் மக்கள் மனங்களில் உணர்ச்சி பொங்கும் வகையில்   அனல் பறக்க பேசியிருந்தனர்.

அவர்களின் பேச்சுக்கள் தமிழ் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.

ஆனால் இறுதியில் ஈ.பி.டி.பியின் மீது இருக்கும் அரசியல் பயம் காரணமாக அரசாங்கத்தை தாஜா பண்ணும் விதமாக வரவுசெலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது நழுவிக் கொண்டனர் எனவும் தெரிவித்தார்.

 அதேவேளை, தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதே  தன்னுடைய இலக்கு எனத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், எதுஎவ்வாறு இருப்பினும் தமிழர்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதில் சிறிதளவு விட்டுக் கொடுப்பிற்கும் இடமளிக்கப் போவதில்லை எனவும், போலித் தமிழ் தேசியவதிகளும் மக்களை ஏமாற்றும் அரசியலை விடுத்து, வெளிப்படை தன்மையோடு  மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முனவருவார்களாயின் அவர்களையும்  இணைத்துக் கொண்டு  பயணிக்க தயாராக இருப்பதாகவும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments