தெற்கில் ஒரு இலட்சம் கொரோனா தொற்றாளர்கள்?


இலங்கையின் தெற்கில் கொரோனா தொற்றாளர்களாக சுமார் ஒரு இலட்சம் பேர் வரையில் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 538 பேரில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொரோனா தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் இலங்கை அரசு புள்ளிவிபரங்களை மறைத்துவருகின்ற நிலையில் வெளியே உள்ளவர்களையும் இணைத்து சுமார் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் இருக்கலாமென மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 304 பேர், பொரளை பகுதியில் 254 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 28 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், களுத்துறை மாவட்டத்தில் 27 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 23 பேர் மற்றும் காலி மாவட்டத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 11 பேர், குருநாகல் மாவட்டத்தில் 10 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 02 பேர், நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து வருகைதந்த 69 பேர் உட்பட கொரோனா தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்பு தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.



No comments