சாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி:இருவருக்கு காயம்?



தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது  கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனத்தின் மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மூவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளார்.



No comments