மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை! யாழ் மேல் நீதிமன்றம் கட்டளை!!


மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த கட்டளையை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பின் நினைவுநாளை நடத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் நீதிமன்றில் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments