மேலும் 91 பொலிஸ் அதிகாரிகளுக்கு பிரச்சினை?

 


மேலும் 91 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள்.

அத்துடன் பொலிஸ் தலைமையகத்திலிருந்து ஆறு பேரும், கொழும்பு – 02 பொலிஸ் நிலையம், பொலிஸ் சிறப்பு பணியகம், பொலிஸ் விளையாட்டுப் பிரிவு ஆகியவற்றிலிருந்து தலா ஓர் அதிகாரியும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஒக்ரோபர் 4 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டில் இதுவரை 612 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் 145 பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments