இலங்கை சிறைகளில் குழப்பம்?



இலங்கை சிறைகளில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில் பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய போகம்பர சிறைச்சாலையில் கூரை மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள் தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெலிக்கடை உள்ளிட்ட சிறைகளில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


No comments