மாங்குளத்திலும் கொரோனா வைத்தியசாலை?

 


மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவை நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றியுள்ளதாக, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.   


வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.  


 இக்கொரோனா   சிகிச்சை நிலையத்தில்30 நோயாளர்கள்  படுக்கைகளைக் கொண்டுள்ளதெனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் என்பவற்றில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக சில பிரிவுகள்  மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments