அரியாலையில் மதில் வீழ்ந்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியில் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர் மதில் இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.



No comments