தென்னிலங்கையின் கொரோனா வைத்தியசாலை:வடக்கு?



தெற்கில் கெரோனா பரம்பல் கட்டுப்பாட்டினை தாண்டி சென்று கொண்டிருகின்ற நிலையில் வடக்கை பாதிக்கப்பட்டவர்களிற்கான மருத்துவ கூடமாக்க அரசு முற்பட்டுள்ளது.

ஏற்கனவே கிளிநொச்சி மற்றும் மருதங்கேணியில் கொரோனா சிகிச்சை வைத்தியசாலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் ஓர் வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றுமோர் வைத்தியசாலையாக கோப்பாய் கல்வியல் கல்லூரியும் மாற்றப்படவுள்ளது.

இதற்காக தற்போது கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா தடுப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 217 பேரும் நாளை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு கட்டிடம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. அவ்வாறு கையளிக்கப்படும் கட்டிடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும் கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதனை வைத்திய அதிகாரிகள் உறுதி செய்தனர் .

இதுவரை படையினர் வசமிருந்த கட்டடங்கள் போதனா வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.


No comments