பரதநாட்டியத்தில் மகிந்தவுக்கு விருப்பம்?


தமிழ் பெண்களது நடனத்தை பார்ப்பதில் மகிந்தவுக்கு வயதானாலும் சலிப்பதில்லை. இலங்கை பிரதமர் மகிந்த தலைமையில் அலரி மாளிகையில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது.

நிகழ்வில்; மகிந்தவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக அங்கயன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தமிழ் மாணவிகளது பரத நாட்டியமும் நடந்திருந்தது.


முன்னதாக ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பலாலியில் மகிந்தவிற்கு பரதநாட்டிய அரங்கேற்றம் செய்ய யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் அவரது பரதநாட்டிய விருப்பம் பற்றி பின்னர் விபரித்திருந்தார்.



No comments