யாழ்ப்பாணத்தில் இரண்டாவது கொரோனா?


கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செயயப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் கொரோனா தொற்று என இனங்காணப்பட்ட குறித்த பெண் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக கூறப்படும் பருத்தித்துறைச் சாலைக்குச் சொந்தமான இபோச. பேருந்தின் நடத்துநருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருக்கு இன்று மேற்கொண்ட இரண்டாவது PCR பரிசோதனையை அடுத்து குறித்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments