தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா கூமாங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூமாங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.00மணி தொடக்கம் 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தந்தையுடன் குறித்த இளைஞனும் வீட்டில் இருந்துள்ளனர். தந்தை காலை 7.00 மணியளவில் தொழில் நிமித்தம் வெளியில் சென்றுள்ளனர். பின்னர் 8.00 மணியளவில் குறித்த இளைஞனின் சகோதரன் வீட்டிற்கு வருகை தந்த சமயத்தின் வீட்டின் அறையினுள் அவ் இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவரின் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

26 வயதுடைய தங்கவேல் சிவகுமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

No comments