பிரித்தானியாவில் திலீபனின் 5ஆம் நாள் நினைவேந்தல்

  “பார்த்தீபன் இன்னும் பசியுடன்தான் இருக்கின்றான்”. பார்த்தீபனின் தமிழீழ தாகத்தை மனங்களில் சுமந்து அவருக்கான 5ம் நாள் நினைவு

வணக்க நிகழ்வில் ஒன்று கூடும் தமிழர்கள்.

தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்கு பரைசாற்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 33ம் ஆண்டின் 5ம் நாள் நினைவு வணக்க நிகழ்வுகள் இன்று 19.09.2020 சனிக்கிழமை பிரித்தானியாவில் இனையவழியூடாக நடைபெற்றது.

தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் குரோலி தமிழ் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் வணக்க நிகழ்வில் திலீபன் அண்ணாவின் நினைவுகள்சுமந்த எழுச்சி உரைகளை சிறுவர்கள் அரங்கேற்றியிருந்தார்கள். அத்துடன் கருத்துரையினை தாயகமும் மக்களவையின் பணியும் என்ற கருப்பொருளில் இத்தாலி நாட்டிலிருந்து அனத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் செயலாளர் திரு செபஸ்தியாம்பிள்ளை றாயன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.







No comments