மணிவண்ணன் இடை நிறுத்தம்! பெயரைப் பயன்படுத்த முடியாது! கஜேந்திரகுமார்
இன்று கட்சியின் தலைச் செயலகத்தில் நடத்திய ஊடகச் சத்திப்பிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அவர் தெரிவித்த கருத்துக்களின் முக்கியமான சில பகுதிகளை இங்கே:-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிலிருந்து மணிவண்ணனை இடை நீக்கம் செய்துள்ளோம். அவர் இன்று முதல் தமிழ்த் தேசிய முன்னணி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. இது தொடர்பில் இன்று மின்னஞ்சல் மூலமாகவும் பதிவுத்தபால் மூலமாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
கட்சியின் கொள்கைக்கு முரணாகவும், கட்சியின் தலைமைத்துவத்தை கேள்விக்குட்படுத்துகின்ற வகையிலும் மணிவண்ணன் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவியைப் பயன்படுத்தியதால் மத்திய குழுவின் முடிவை எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.>அதாவது அவர் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் உடனடியாக நடைமுறைக்கு வரக்கூடிய வகையில் நீக்கப்பட்டிருப்பதாக எழுத்து மூலகமக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரிடம் எழுத்து மூலமாக பதிலை எதிர்பார்த்து இருந்தோம். அவரும் எழுத்து மூலமாக பதிலை மத்திய குழுவுக்கு அனுப்பியிருந்தவர்.
அக்கடிதத்தினை மத்திய குழு ஆராய்ந்து அவரின் பதில்கள் மத்திய குழுவால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும். குறிப்பாக மத்திய குழுவின் முடிவுகளை ஏற்காமல் மணிவண்ணன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளோம். அத்துடன் உடன் நடைமுறைக்க வரக்கூடிய வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நிலையிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மின்னஞ்சல் வழியாகவும் அதேபோன்று பதிவுத் தபாலிலும் இன்று சனிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
அவர் மேலதிகமாக இரண்டு கிழமைக்குள் இந்த முடிவுகளுக்கான பதில்களை எழுத்து மூலமாக அறிவிக்கலாம். அல்லது தனது கருத்துக்களை மத்திய குழுவுக்கு எழுத்து மூலம் பதிவு செய்யலாம்.
மணிவண்ணனின் பதில் என்ன அடிப்படையில் இருக்க வேண்டும் என்றால் அவரின் உறுப்புரிமை இடை நீக்கம் செய்யப்பட்டது நிரந்தரமாக கருதப்படாமல் இருப்பதற்கு அவரின் நியாயங்களைப் பதிவு செய்யவதற்கு தன்னுடைய கருத்துக்களையும் சாட்சியங்களையும் முன்வைக்கலாம்.
இரண்டு கிழமை கார அவகாசத்திற்குப் பின்னர் ஒரு ஒழுக்காற்று நடவடிக்கைக் குழு உருவாக்கப்பட்டு சாட்சியங்களோடு அவருடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் விசேடமாக இந்தக் குற்றப்பத்திரிகையில் 6 குற்றங்களை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும். அந்த விசாரணையின் முடிவின் பிரகாரம் மணிவண்ணன் கட்சியில் உறுப்பினராக இருப்பாரா இல்லையா என்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
Post a Comment