கரையொதுங்கியது சடலம்!

புத்தளம் கற்பிட்டி வண்ணிமுந்தல் கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளது. கற்பிட்டி  இன்று திங்கட்கிழமை காலை சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பிரதேச மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். குறித்த சடலம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments