விஜயகாந்திற்கு கொரோனா?


ஈழ தமிழ் மக்களது போராட்டத்தை நேசித்த தமிழ் தலைவர்களுள் ஒருவரான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.


மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது.


மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நிலை குறித்து உடனடியாக எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது


No comments